திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ்(43). நாகர்கோவில் மாவட்டம், பார்வதியாபுரத்தை சேர்ந்த முருகேசன்(47). ஆகிய இருவரும் வந்த இரண்டு டிப்பர் லாரியையும் சோதனை செய்ததில் தலா 4 யூனிட் (கிராவல்) மண்ணை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக அள்ளிக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல் உதவி ஆய்வாளர், சோபியா வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 4 யூனிட் (கிராவல்) மண் மற்றும் 2 டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















