திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரந்தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (21.05.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., பொதுமக்களிடம் இருந்து பெற்ற 10 புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முகாமில் காவல் துணை ஆணையர்கள், V.கீதா,(மேற்கு) V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்