திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையர், வி.பிரசன்ன குமார், இ.கா.ப.,(மேற்கு) மற்றும் காவல் துணை ஆணையர், வி.வினோத் சாந்தாரம்,(கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்றனர். இதில் 9 பேர் மனு அளித்தனர். அவற்றின் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என துணை காவல் ஆணையர்கள் உறுதியளித்தனர். இதே போல் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., தலைமை வகித்து 20 மனுக்களைப் பெற்று அவற்றின் மீதான விசாரணையை விரைந்து முடித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்