திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (07.11.2025) தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு (09.11.2025) ம்தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள்.
















