திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49). அவரின் மனைவி புஷ்பா(42). ஆண்டிநாயக்கன் வலசுவை சேர்ந்த வேலுச்சாமி(62). உள்ளிட்ட 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சரவணன் அவர்கள், ரவி, புஷ்பா, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பழனி மதுவிலக்கு போலீசார் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா