கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.S மாதவன் அவர்கள் தலைமையில் ஊழல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொதி –”நமது நாட்டின் பொருளாதாரம் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
எனவே நான், அனைத்து செயல்களிலும் நேர்மையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியபடுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், திரு.சரவணன், திரு.திருமால், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜெயசத்திரன், தனிப்பிரிவு காவல் ஆய்வளர் திரு.சக்தி, மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்துகொண்டு ஊழலுக்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றனர்.















