இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடத்தபட்டது. இதில் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். மேலும் இதுவரை 12 முறைகள் இரத்த தானம் வழங்கிய ஆயுதப்படை காவலர் திரு.சரவணபாண்டியன் அவர்களின் நற்செயலை பாராட்டும் வகையில் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
















