திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சிவந்திபட்டி குத்துக்கல் விளக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (25). என்பவரை சோதனை செய்ததில், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து திருநெல்வேலி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு (20.11.2025) அன்று லட்சுமணனை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















