மதுரை : மதுரை மாவட்டம் செக்கானூரணி மற்றும் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (03.02.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில்,சிவகுமார் (36). பிரவின் குமார் (30). விக்னேஷ் (27). விஸ்வநாத் (24). என்ற நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மொத்தம் 06 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து தகவல் வழங்க, பொதுமக்கள் 91760-79100 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியம் காக்கப்படும் என்றும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
















