திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குப்பகுறிச்சி விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த குப்பகுறிச்சி, தெற்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் (25). என்பவரை சோதனை செய்தபோது, சுமார் 1.05 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர், வேல்கனி வழக்குப் பதிந்து, மகாராஜனை கைது செய்து அவரிடமிருந்த சுமார் 1.05 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்