திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா காவல் உதவி ஆய்வாளர், தங்கப்பராஜா தலைமையிலான காவல்துறையினர் (19.09.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சாரதா கல்லூரி விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மேலக்குளம் நடுவூரை சேர்ந்த மாரிமுத்து (30). என்பவரை சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து திருநெல்வேலி தாலுகா காவல் ஆய்வாளர், சசிகுமார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்