திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் காவல்துறையினர் (10.05.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சிவகாமிபுரம் பெட்ரோல் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த கீழ பாப்பாக்குடி, வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த சுடலை (19). என்ற இளைஞரை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்ததால் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர், ஆழ்வார் வழக்கு பதிவு செய்து சுடலையை கைது செய்து அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்