மதுரை : மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட L.K.P நகர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. மணிமாறன் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பாக்யராஜ் (45). என்பவரை கைது செய்தார். மேலும் கைது செய்த நபரிடம் இருந்து 6 kg கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.