திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, திருமலாபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த களக்குடி காலணி தெருவை சேர்ந்த மதன்குமார்(22). என்பவரை சோதனை செய்ததில் அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மானூர் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் மதன்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 165 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்