மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் படி நிலைகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பொறுப்பில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல்நிலையத்தில் கடந்த 2022 ம் வருடம் தாக்கலான குற்ற எண் 189/2022, U/s 8(c) r/w 20(b) (ii)(C), 25, 29(1) NDPS Act என்ற கஞ்சா கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 1) பிரகாஷ், (25). (ஒத்தக்கடை கா.நி- HS No.431/2023) த/பெ பாலு, டி.மேட்டுப்பட்டி, எழுமலை, மதுரை, 2) நிஷாந்த் என்ற நிஷாந்தன், (31). (ஒத்தக்கடை கா.நி-HS No.432/2023) த/பெ வாசுதேவன், அஞ்சுகம் காம்பவுன்ட், அவணியாபுரம், மதுரை, 3) ஜெகதீசன் என்ற முருகன், (43). த/பெ பாண்டியன், கீழபுதூர், உசிலம்பட்டி, மதுரை 4) குணா என்ற குணசேகரன், (36). (ஒத்தக்கடை கா.நி- HS No.433/2023) த/பெ காளிமுத்து, மேல வெளி வீதி, வேதாரணியம், நாகபட்டிணம் என்பவர்களுக்கு எதிராக மதுரை மாவட்ட கனம் முதன்மை போதை மற்றும் மனமயக்கும் பொருட்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட குற்றவாளிகள் தொடர் குற்றசெயல்களில் ஈடுபட்டதன் காரணமாக சரித்திர பதிவேடுகள் ஆரம்பித்து கண்காணிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட கனம் முதன்மை போதை மற்றும் மனமயக்கும் பொருட்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.செங்கமலை செல்வன் அவர்கள் மேற்படி வழக்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்கண்ட குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய்.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். அதன் பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தருவதற்கு உதவியாக நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் திரு.பால்ராஜூ மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு.வீரகார்த்திக் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்