திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல்துறையினர் (23.08.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருப்பனூத்து பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி பாண்டி (29). என்பவரை சோதனை செய்தபோது, அவர் கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர், லூக்அசன் சங்கிலி பாண்டியை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்