திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது. அனைத்து வகையினரும் ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே, நான் அனைத்துச் செயல்களிலும் நேர்மையும், சட்டவிதிகளையும் பின்பற்றுவேன் என்றும் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்துச் செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும்
ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















