திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், (பொறுப்பு) முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், (21.02.2025) அன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் துணை ஆணையர், வெ.கீதா (மேற்கு) தலைமையில், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர், சுதீர்லால், அமைச்சு பணியாளர்கள் மற்றும், காவல் ஆளிநர்கள் ஒன்றிணைந்து, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபட்டு, தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒழிக்க எந்நாளும் உழைத்தும் அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிட்டும், குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம் என்றும் இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத்தமிழ் மொழி நாளான இன்று உளமாற கூறுகிறேன் என, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்