திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N . சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வாடகை அல்லது குத்தகைக்கு வீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உரிமையாளர்களிடமிருந்து வீட்டை வாடகை அல்லது குத்தகை என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து பெற்றுக் கொள்ளும் நபர்கள், பின்னர் உரிமையாளருக்குத் தெரியாமல் வேறு நபர்களிடம் பெரும் தொகைக்கு அதை உள்வாடகைக்கு விட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் ஒப்பந்தம் பெற்ற நபர்கள்தான் குடியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபர், உரிமையாளர் அனுமதியின்றி அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்