திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் நகர் டிஎஸ்பி. கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல், விருவீடு, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 சிறுவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3 அதிவேக பைக்குகள் உட்பட 9 பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்ற இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த நகர் டி.எஸ்.பி கார்த்திக் தலைமையிலான போலீசாரை மாவட்ட எஸ்.பி பிரதீப் பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















