திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில், ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை நம்பச் செய்து இணைய வழி மோசடி செய்து பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வந்த “கணினி வழி சட்டக்குற்றவாளியான” கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், கிடங்காயத்தைச் சேர்ந்த மிக்தாத் மகன் ராசித்(27). என்பவரை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், S. விஜயகுமார் (தலைமையிடம்). உதவி ஆணையர் T.செந்தாமரைக்கண்ணன் (பொறுப்பு சைபர் கிரைம்). காவல் ஆய்வாளர், சு.சண்முகவடிவு (சைபர் கிரைம்) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., ஆணைப்படி (31.10.2025)- அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














