மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் பேரிலும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர புலன்விசாரணையில் ஈடுபட்டு கடந்த 2021-ம் ஆண்டு பேஸ்புக் மூலமாக பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி திருமணம் செய்து கொள்வற்காக இந்தியா வந்திருப்பதாகவும் திருமண பரிசுப்பொருட்களை சுங்க அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாகவும் அதை மீட்க வேண்டும் எனக்கூறி பல்வேறு வங்கி கணக்குகள் மூலமாக ரூ.15.62 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த வழக்கில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான உத்திரபிரதேசம் எட்டுவா மாவட்டம் மகவா கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் ஈசு சர்மா என்பவரை உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் வைத்தும், கடந்த 2022-ம் ஆண்டு வங்கி ஒன்றின் மேலாளருக்கு பிரபல கார் கம்பெனி நிறுவன முதலாளி போல ஆள்மாறாட்டம் செய்து பேசி வங்கியிலிருந்து ரூ.51.59 லட்சம் பணத்தை ஆன்லைன் பணமோசடி மூலம் பெற்று ஏமாற்றிய வழக்கில் ஈடுபட்ட மேற்கு டெல்லி கயாலவை சேர்ந்த தர்சன்சிங் மகன் அஐய்சிங் என்பவரை மேற்கு டெல்லியில் வைத்தும் கடந்த 2024-ம் ஆண்டு ஆன்லைன் மேட்ரிமோனி மூலமாக மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் பழகி அவருடைய உறவினருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ரூ.15 லட்சம் பணத்தை ஆன்லைன் பணமோசடி மூலம் பெற்று ஏமாற்றிய வழக்கில் ஈடுபட்ட வடமேற்கு டெல்லி முகந்த்பூரை சேர்ந்த மம்தா ராணி மற்றும் அவரது கணவர் பர்தீப் ஆகியோரை வடமேற்கு டெல்லியில் வைத்தும் மேற்படி நான்கு சைபர் கிரைம் குற்றவாளிகளை மதுரை மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், ATM கார்டுகள் மற்றும் பேங்க் பாஸ்புக்குகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி குற்றவாளிகளை விசாரணை செய்ததில் கமிஷன் பணத்திற்காக குற்றவாளிகள் அவர்களுடைய வங்கி கணக்குகளை சைபர் குற்றவாளிகளுக்கு கொடுத்து அவர்கள் ஆன்லைன் பணமோசடி செய்து பொதுமக்களிடமிருந்து பணத்தை பெறுவதற்கு உதவியாக இருந்ததும் அதற்கு லட்ச கணக்கில் கமிஷன் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவற்றை தரும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள்தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கலாம் என்று மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்