திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அன்று (19.12.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது தலைமையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு (21.12.2025) ம்தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















