இராணிப்பேட்டை : இன்று (08.06.2024) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சரவணன் (தலைமையிடம்), திரு.குமார் (CCW), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சுரேஷ் (மாவட்ட ஆயுதப்படை), செல்வி.சந்திரலேகா (பயிற்சி), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர் மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் (அரக்கோணம் உட்கோட்டம்) அவர்கள் தலைமையில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது.