திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (24.06.2025) அன்று நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியில் கலந்து கொண்ட தலைமையிட துணை ஆணையர் S.விஜயகுமார், மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள், மற்றும் நிறை குறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதன் பின் மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கு ( 06 முதல் 12ம் வகுப்பு வரை) தமிழ் மற்றும் ஆங்கில மொழி வழிகாட்டு புத்தகங்களை வழங்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்