திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அண்மையில் சோளிங்கரில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டும், திருவண்ணாமலையில் வழக்கறிஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வழக்கறிஞர்களின் படுகொலையை கண்டித்து பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்களின் படுகொலையை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதியை நிலைநிறுத்த போராடும் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் மிரட்டல் உள்ள வழக்கறிஞர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கிடவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு