தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 74மனுக்கள் பெறப்பட்டு 74 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு பாலசுப்ரமணியம் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.