தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (27.08.2025) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு திரு.K.ஸ்ரீதரன் அவர்கள், அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது .இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 55 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 55மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.