திருநெல்வேலி: தமிழ்நாடு காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் (23.07.2025) முதல் (26.07.2025) வரை சென்னை ஒத்திவாக்கத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த டவுண் போக்குவரத்து தலைமை காவலர் (HC 532) சுந்தரமூர்த்தி 300 மீட்டர் தூரத்திற்க்கான தோன்றி மறைதல் (Snap Target) துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும், மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் (HC 931) சாலை சந்துரு 300 மீட்டர் தூரத்திற்க்கான நிலையான துப்பாக்கி (இன்சாஸ்) சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் அஞ்சூர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன், தலைமை காவலர் (HC 532) சுந்தரமூர்த்தி, ஆகியோர் பங்குபெற்ற தென்மண்டல அணி பிரிவு ஓட்டுமொத்த ரைபில் பிரிவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.போட்டியில் பதக்கம் மற்றும் shield வென்ற காவல் துறையினரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப., (08.08.2025) அன்று நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர், Dr. V. பிரசண்ணகுமார், இ.கா.ப, (மேற்கு) காவல் துணை ஆணையர் S.விஜயகுமார், (தலைமையிடம்) மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன் மற்றும் டவுண் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்