பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 10.12.2022-ம் தேதி பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
மேலும் மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு.முகமது அபுபக்கர் திருமதி.நல்லம்மாள் மற்றும் தலைமைக் காவலர்களும், பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் திரு.கிருஷ்ணராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மனு விசாரணை முகாமில் மொத்தம் 09 மனுக்கள் பெறப்பட்டு 09 மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.