திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பாலாஜி நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை பகிர்ந்து கொள்வதாலும், முகாந்திரம் இல்லாமல் தெரியாத நபர்களிடம் வரும் வீடியோ அழைப்புகள், மற்றும் சமூக வலைத்தளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்றும், சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் இலவச உதவி எண் 1930 மற்றும் (http://cybercrime.gov.in) இணையதள முகவரியில் புகார் அளிக்கவும் தெளிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்