திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கன்வாடி பகுதியில் கடந்த (06.08.2022), ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் லிங்கன்வாடி பகுதியைச் சேர்ந்த நல்லியப்பன் (58), என்பவர் உட்பட 08 நபர்களை நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். இந்நிலையில் இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 08 நபர்களில் நல்லியப்பன்(58), மற்றும் சிவம் (எ) பொன் நாட்டாமை (26), ஆகிய இருவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து நத்தம் காவல் நிலைய போலீசார் நல்லியப்பன் மற்றும் சிவம் (எ) பொன் நாட்டாமை ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா