குமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.இரா ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, புகையிலைப்பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த பாறசாலை வாணியக்கோடு செல்லன் என்பவரது மகன் கண்ணன் 44. மற்றும் குழிவிளை பகுதி சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகன் வினோத் 45. என்பவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 35 கிலோ எடை கொண்ட புகையிலைப்பொருட்கள், விற்பனைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்தனர்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா,குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையானது மேலும் தீவிர படுத்தப்படும்.