திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகரை கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு பட்டா வழங்க கோரி அரசாங்க பதிவேட்டில் கிராமத்தார் பெயரில் தாக்கல் ஆகி உள்ள புஞ்சை நிலத்திற்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று என போராடி வருகின்றனர். கடந்த காலங்களில் கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார், வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்து 2023 ஆம் ஆண்டு இவ்விடத்தை அளவீடு செய்தனர்.
ஆனால் இதுவரை வரையில் அவர்களுக்கு வீட்டு பட்டா வழங்கவில்லை மேலும் இந்த ஆண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் படி கிராமத்தார் பெயரில் தாக்கலாகி உள்ளதை வகை மாற்றம் செய்து உடனடியாக இந்த மண்ணின் மைந்தர்களாகவும் பூர்விக குடிகளாகவும் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வடகரை கிராம பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு