திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அடுத்த கடம்பஞ்சேரி கிராமத்தில் ஒருங்கிணைந்த கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாட்டில் படித்து முதுநிலை மருத்துவர் பட்டம் பெற்று தாயகம் திரும்பிய செல்வி. மருத்துவர்.யாழினி வினோத், அவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலராக பொறுப்பு ஏற்றமைக்கு பாராட்டு விழாவும்,முதியோர் மற்றும் மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மருத்துவர் செல்வி.யாழினி வினோத் அவர்கள் இருநூறுக்கு மேற்பட்ட முதியோருக்கு போர்வைகள், சேலைகள், மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுப் பொருள்கள் வழங்கி, ஏற்புரையாற்றினார். நூற்றுக் கணக்கானோர் பங்கேற்ற இந் நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் கோ.தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அறக்கட்டளை நிறுவனர். அ.வினோத் , சீயோன் பள்ளி தாளாளர். சே.அருள்தாசு, சமுக சேவகர் செகநாதன், லோ.வெற்றிச் செல்வன், யாபேசு,திரைப்பட இயக்குனர் ஜீவா, ஆசிரியை விசயலட்சுமி இளந்தென்றல், உள்ளிட்டோர். வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக அக்ரபாக்கம்.மு.குமார் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு