திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க sharp abacus learning school மூலம் 10 நாட்கள் இலவச கணித அடிப்படை அபாகஸ் பயிற்சியை காவல் துணை ஆணையர், S.விஜயகுமார், (தலைமையிடம்) (17.05.2025) அன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர், அசோக் குமார், மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர், டேனியல் கிருபாகரன், கணினி பயிற்சி ஆசிரியை யாஸ்மின், ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்