திண்டுக்கல் : (31.07.2022), திண்டுக்கல் மாவட்டம் பழனி ரோட்டில், உள்ள ராஜ் டீக்கடையில் கடந்த (21.06.2022) ம்தேதி திண்டுக்கல் மேற்கு அசோக் நகரை சேர்ந்த கோகுல்ராஜ் (27), மற்றும் மருதாணிக்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (எ) அருவாவேல் (30), ஆகிய இருவரும் அரிவாளைக் கொண்டு டீக்கடையில் இருந்த பழனிகுமார் என்பவரை மிரட்டி கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து நகர் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கோகுல்ராஜ் மற்றும் வேல்முருகன் (எ) அருவாவேல் ஆகியோரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 02 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து நகர் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா