இராமநாதபுரம் : இராமநாதபுரம் காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் (02.04.2023)-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை தலைமை இயக்குனரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறிப்பாணையின்படி, காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக , இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை அவர்களின் அறிவுறுத்தலின் படி சாயல்குடி காவல் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி