இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஐமால், இ.கா.ப., அவர்கள் (10.11.2025) அன்று வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலாஜா பேருந்து நிலையம் மற்றும் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட S.K.C ஜங்ஷன் ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையை திடீர் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் நிறுத்தி வாகன தணிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி பராமரிக்கப்படும் ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
















