அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (21.06.2025) ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் தலைமை வகித்தார்கள். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அருள்முருகன் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் உடன் இருந்தார்கள்.