ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சேர்ந்த கௌசல்யா த/பெ சேகரன் என்பவர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி ஆய்வாளர் திரு.தியாகராஜன் அவர்களின் தலைமையிலான போலீசார் இன்று (23.08.2024) ஆன்லைனில் இழந்த பணத்தை ரூ. 3,08,730 மீட்டு கௌசல்யா த/பெ சேகரன் எனபவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிராக புகார் அளிக்க 1930 என்ற உதவி எண்ணை அழைக்கவும்.