திருவள்ளூர்: திருவள்ளூர் ராக்கி தியேட்டர் அருகில் ஆட்டோக்களை வரிசையில் நிறுத்தி வைத்து ஆட்களை ஏற்றுவதால் சாலையில் நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்களிடமிருந்து அடுக்கடி புகார்கள் வந்ததின் அடிப்படையில் அப்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.சு.மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு.கா.பன்னீர்செல்வம் மற்றும் திரு.கோ.மோகன் ஆகியோர் திடீர் தணிக்கை மேற்கொண்டு 5 ஆட்டோ ரிக்க்ஷாக்களை தகுதி சான்று (எப்.சி) இல்லாதது மற்றும் வெளியூர் வாகனங்கள் திருவள்ளூர் பகுதியில் இயக்கியது போன்ற குற்றங்களுக்காக சிறைப்பிடித்து திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி ரூபாய் 45,000 அபராதம் விதித்தனர்.
மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் கூறும் போது, ஆட்டோ ரிக்க்ஷாக்களை அனுமதி சீட்டின் படி (பர்மிட்) அந்தந்த அலுவலக எல்லையில் மட்டுமே இயக்க வேண்டும். மீறி தத்தம் அலுவலக எல்லையை தாண்டி வந்தால் அனுமதிக்கு புறம்பான இயக்கமாக ஆகி 5000 முதல் 10000 வரை இணக்க கட்டணம் அல்லது வாகன சிறைப்பிடிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்றும் விளக்கினார்.