திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக எறியும், கால்களை நடைமேடையில் தேய்த்தபடியும் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது.
சம்மந்தமாக கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட அந்த மாணவர் மற்றும் மாணவியை அவர்களது பெற்றார்களுடன் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது ஆபத்தான பயணம் பற்றி அறிவுரை வழங்கினார்.
மேலும், அவர்களின் எதிர்கால கனவு குறித்து கேட்கும் போது அந்த மாணவர் தான் ஒரு D.S.P ஆகப்போவதாகவும், அந்த மாணவி தான் ஒரு I.P.S அதிகாரியாகபோவதாகவும் தெரிவித்தனர். அந்த மாணவர்கள் வருங்காலத்தில் சிறப்பாக படிக்க ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது.