செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ. பிரதீப்., இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. S. மணிமேகலை அவர்களின் மேற்பார்வையில் மேல்மருவத்தூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் திரு. மோகனசுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன், மு.நி.கா-377 திரு. ராஜ்குமார், காவலர்-417 திரு. கார்த்திக் உள்ளிட்ட மாவட்ட தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்த விஜயகுமார் என்பவரை கைது செய்து 50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை மீட்டு குற்றவாளியை நீதிமன்றக் காவலுக்கு உற்படுத்தினர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்