செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த காவலர்களை மாவட்டத்தில் காலி பணியிடங்கள் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியமர்த்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காவலர்கள் தாங்கள் விரும்பும் காவல்நிலையங்களில் பணிபுரிய காலி பணியிடங்களின் அடிப்படையில் தேர்வு செய்து பணி ஆணை வழங்கப்பட்டது.