பெரம்பலூர் : திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர் இ.கா.ப ஆகியோர்களின் உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்யாம்ளா தேவி அவர்களின் மேற்பார்வையில் இன்று 24.01.2023-ம் தேதி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.M.S.M.வளவன், மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில் உள்ள பொது மக்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சமூகத்தில் உள்ள அனைவரும் சமம் என்றும், ஒருவர் ஒருவரிடம் பேசும் போது சகோதரத்துவத்துடனும் மனிதாபிமானத்துடனும் பேச வேண்டும் எனவும் கூறினார். மேலும் வருங்கால சந்ததியினருக்கு அனைவரும் சமம் என்பதை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்களது இல்லத்தில் இருந்து அந்த முயற்சியை துவக்க வேண்டும் எனவும் கூறினார்.