சென்னை: நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ், மற்றும் சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தொகுதியில் உள்ள கொளத்தூர் காவல் நிலையத்தின் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. எஸ்.லோகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தமிழக காவல்துறையினரின் பணி மிகவும் இன்றியமையாதது. காவல் துறையினர் இல்லாமல் தமிழகத்தில் அமைதி நிலவாது. சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. எஸ்.லோகநாதன் அவர்கள் அப்பகுதியில் சீரிய முறையில் மக்கள் சேவையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவரது புகார்களின் மீது அவர் எடுக்கும் துடிப்பான செயல்பாடு, அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரின் மிகுந்த அலுவல் பணிகளுக்கிடையே, நேரம் ஒதுக்கி நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. எஸ்.லோகநாதன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதனைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு இருவருக்கு தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிக்கு சைக்கிள்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நலிந்த மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின்போது பேசிய காவல் ஆய்வாளர் குழந்தைகளை எப்படி கண்காணிக்க வேண்டும் என பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார். குடியரசு தின விழா ஏற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு சமூக சேவையின் சக்கரவர்த்தி SMT நிறுவனரும், சென்னை மாவட்ட, திரு.வி.க நகர் தொகுதி தலைவர் (சமூக சேவை பிரிவு) மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளருமான திரு.டேவிட் நன்றி கூறினார்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. அ. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட, திரு.வி.க நகர் தொகுதி தலைவர் (சமூக சேவை பிரிவு) திரு.திரு.டேவிட் மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
திரு.டேவிட் அவர்கள் வட சென்னையில் உள்ள பல பகுதிகளில் சிறந்த முறையில் எளிய மக்களுக்கு சமுதாய சேவையை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிர்வாகிகள் லோகாபிராமன், பவுலின், தியாகராஜன், ஸ்டீபன், பிரியதர்ஷினி, ரூபன், அலாவுதீன், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.