செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மதுராந்தகம் காவல் ஆய்வாளர் திரு.சி.தர்மலிங்கம், அவர்களின் மனிதநேயமிக்க நற்பண்பை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார்.