திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டி என்ற பபூன் பாண்டி (31), தாலுகா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.P.பாஸ்கரன், அறிவுறுத்தலின்படி தாலுகா காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள் குற்றவாளி பாண்டி என்ற பபூன் பாண்டிக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.