மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா அறிவுறுத்தலின்படி (09.06.24) ம் தேதி இரவு, கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.லாமேக், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி. ஜெயா , தனிப்படை உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் மற்றும் காவல் ஆளிநர்களுடன் திருவெண்காடு காவல் சரகம் ஆலங்குடி வெட்டாத்து பாலம் அருகில் வாகன சோதனை மேற்கொண்ட போது, அதிவேகமாக வந்த காரினை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது காரில் 2190 பாட்டில்களில் 394 லிட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்ததை கைப்பற்றியும், காரினை ஓட்டி வந்த மற்றும் காரில் இருந்த ரமேஷ் (42). மற்றும் கார்த்தி (எ ) திலீப் குமார் (25). ஆகியோரை பிடித்து சீர்காழி மதுவிலக்கு பிரிவு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை முடிந்து, நீதிமன்ற அடைப்புக் காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.